தமிழ்நாடு கல்லூரி மாணவர்கள் குடிகாரர்களா? நடிகர் ஆர்யா விஷம கருத்து!
மேலோட்டமாக பார்த்தால் ஆர்யா ஏதோ நல்லது சொல்ல வருவது போல இருக்கும் இந்த டிவிட்டர் பதிவு, தமிழ் இளைஞர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்று சித்தரிப்பதை போல உள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு உரிமைக்காக நடந்த மாணவர் எழுச்சியின்போது, மற்றொரு நல்ல விஷயமும் அரங்கேறியது என்றால் அது பன்னாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான மனநிலை இளைஞர்கள் மத்தியில் உருவானது என்று கூறலாம்.
இதை உணர்ந்துதான், தமிழ்நாடு வணிகர் கூட்டமைப்பு மார்ச் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பன்னாட்டு கூல்ட்ரிங்சுகளை விற்பனை செய்வதில்லை என்று அறிவித்துள்ளன.
இந்நிலையில், கோவை அருகேயுள்ள ஒரு கல்லூரி தனது சர்க்குலரில் மாணவர்கள் பன்னாட்டு குளிர்பானத்தை விரும்புவதில்லை என்பதை உணர்ந்து, இனிமேல் பழச்சாறுகளை மட்டுமே வினியோகிப்போம் என தெரிவித்துள்ளது. இதை நடிகர் ஆர்யா டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

மதுவை விடனுமாம்
அப்படியே வெளிநாட்டு மது வகைகளையும் விட்டுவிட்டு, இவர்கள் பழச்சாறு மற்றும் பழம், காய்கறிகளிலான smoothies சாப்பிட வேண்டும் என கூறியுள்ளார் ஆர்யா. மேலோட்டமாக பார்த்தால் ஆர்யா ஏதோ நல்லது சொல்ல வருவது போல இருக்கும் இந்த டிவிட்டர் பதிவு, தமிழ் இளைஞர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்று சித்தரிப்பதை போல உள்ளது.

குடிகாரர்களா மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பெரும் யுக புரட்சியை நடத்தி காட்டிய நிலையில், கல்லூரி சர்க்குலரை காண்பித்து, 'இவர்கள்' வெளிநாட்டு மதுபானத்தை தவிர்க்கலாம் என கூறியுள்ளார் ஆர்யா. அப்படியானால், இவர்கள் என அழைக்கப்படும் கல்லூரி மாணவர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்பதே இவரது கருத்து. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர் புரட்சியை ஏதோ குடிபோதையில் நடந்துள்ளதை போல வர்ணித்துள்ளார் ஆர்யா என்ற சந்தேகம் எழுகிறது.

ஜல்லிக்கட்டு
ஏனெனில் இந்த நடிகர் ஆர்யாதான், ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று சில வாரங்கள் முன்பு டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். நெட்டிசன்கள் கழுவி ஊற்றியதால் சுதாரித்துக்கொண்ட ஆர்யா, ஐய்யய்யோ, நான் சும்மா தெரிஞ்சிக்க கேட்டேன். நக்கல் செய்யவில்லை என்றார்.

விளாசிய சிம்பு
சிம்பு தனது பேட்டியில் கூட ஆர்யாவை பெயர் குறிப்பிடாமல் இந்த கருத்துக்காகத்தான் கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டு சோறை சாப்பிட்டுக்கொண்டு தமிழர் கலாசாரம் என்னவென்று கேட்கிறார்கள். முதலில் அவங்க அப்பா, அம்மாவிடம் தமிழ்னா என்னன்னு கேட்டுவிட்டு வரட்டும் என சாடினார் சிம்பு. இப்போது ஜல்லிக்கட்டு பிரச்சினை ஓய்ந்துள்ள நிலையில், ஆர்யா தனது நக்கல், நையாண்டி அணுகுமுறையை கையில் எடுத்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications