தமிழ்நாடு கல்லூரி மாணவர்கள் குடிகாரர்களா? நடிகர் ஆர்யா விஷம கருத்து!
மேலோட்டமாக பார்த்தால் ஆர்யா ஏதோ நல்லது சொல்ல வருவது போல இருக்கும் இந்த டிவிட்டர் பதிவு, தமிழ் இளைஞர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்று சித்தரிப்பதை போல உள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு உரிமைக்காக நடந்த மாணவர் எழுச்சியின்போது, மற்றொரு நல்ல விஷயமும் அரங்கேறியது என்றால் அது பன்னாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான மனநிலை இளைஞர்கள் மத்தியில் உருவானது என்று கூறலாம்.
இதை உணர்ந்துதான், தமிழ்நாடு வணிகர் கூட்டமைப்பு மார்ச் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பன்னாட்டு கூல்ட்ரிங்சுகளை விற்பனை செய்வதில்லை என்று அறிவித்துள்ளன.
இந்நிலையில், கோவை அருகேயுள்ள ஒரு கல்லூரி தனது சர்க்குலரில் மாணவர்கள் பன்னாட்டு குளிர்பானத்தை விரும்புவதில்லை என்பதை உணர்ந்து, இனிமேல் பழச்சாறுகளை மட்டுமே வினியோகிப்போம் என தெரிவித்துள்ளது. இதை நடிகர் ஆர்யா டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

மதுவை விடனுமாம்
அப்படியே வெளிநாட்டு மது வகைகளையும் விட்டுவிட்டு, இவர்கள் பழச்சாறு மற்றும் பழம், காய்கறிகளிலான smoothies சாப்பிட வேண்டும் என கூறியுள்ளார் ஆர்யா. மேலோட்டமாக பார்த்தால் ஆர்யா ஏதோ நல்லது சொல்ல வருவது போல இருக்கும் இந்த டிவிட்டர் பதிவு, தமிழ் இளைஞர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்று சித்தரிப்பதை போல உள்ளது.

குடிகாரர்களா மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பெரும் யுக புரட்சியை நடத்தி காட்டிய நிலையில், கல்லூரி சர்க்குலரை காண்பித்து, 'இவர்கள்' வெளிநாட்டு மதுபானத்தை தவிர்க்கலாம் என கூறியுள்ளார் ஆர்யா. அப்படியானால், இவர்கள் என அழைக்கப்படும் கல்லூரி மாணவர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்பதே இவரது கருத்து. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர் புரட்சியை ஏதோ குடிபோதையில் நடந்துள்ளதை போல வர்ணித்துள்ளார் ஆர்யா என்ற சந்தேகம் எழுகிறது.

ஜல்லிக்கட்டு
ஏனெனில் இந்த நடிகர் ஆர்யாதான், ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று சில வாரங்கள் முன்பு டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். நெட்டிசன்கள் கழுவி ஊற்றியதால் சுதாரித்துக்கொண்ட ஆர்யா, ஐய்யய்யோ, நான் சும்மா தெரிஞ்சிக்க கேட்டேன். நக்கல் செய்யவில்லை என்றார்.

விளாசிய சிம்பு
சிம்பு தனது பேட்டியில் கூட ஆர்யாவை பெயர் குறிப்பிடாமல் இந்த கருத்துக்காகத்தான் கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டு சோறை சாப்பிட்டுக்கொண்டு தமிழர் கலாசாரம் என்னவென்று கேட்கிறார்கள். முதலில் அவங்க அப்பா, அம்மாவிடம் தமிழ்னா என்னன்னு கேட்டுவிட்டு வரட்டும் என சாடினார் சிம்பு. இப்போது ஜல்லிக்கட்டு பிரச்சினை ஓய்ந்துள்ள நிலையில், ஆர்யா தனது நக்கல், நையாண்டி அணுகுமுறையை கையில் எடுத்துள்ளார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications