தமிழ் சினிமா நடிகரை கடத்தி கட்டாய திருமணமா? தந்தை புகாரால் பரபரப்பு
திருச்சி: சினிமா நடிகரை கடத்தி, திருமணம் செய்து வைத்ததாக கூறப்பட்ட புகாரில் திடீர் திருப்பமாக, ''தன்னை யாரும் கடத்தவும் இல்லை; கட்டாய திருமணம் செய்து வைக்கவும் இல்லை என அந்த நடிகர் தெரிவித்துள்ளார்.
திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் மலையமான் என்ற 22 வயதாகும் நடிகர். 3 வருடங்கள் முன்பு வெளிவந்த கோலாகலம் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம், மலையமானுக்கும், திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த அமுதா என்பவரின் மகள் தீபாவுக்கும் திருமணம் நடந்தது.
ஆனால், தன் மகனை, அமுதாவும், அவரது உறவினர்களும் கடத்தி, வீட்டு சிறையில் வைத்து காட்டாய திருமணம் செய்து விட்டனர் என, மலையமான் தந்தை போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், மலையமான் நிருபர்களிடம் கூறுகையில், யாரும் என்னை கடத்தவில்லை. என்னுடைய காதலுக்கு தடையாக இருந்தது, என் தந்தை. நானாக விரும்பிச் சென்று, காதலி தீபாவை திருமணம் செய்துள்ளேன். யாரும் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய நான் ஒன்றும் குழந்தை இல்லை.
நானாக விரும்பி, காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளேன். அவருக்கும், எனக்கும் மூன்று வயது தான் வித்தியாசம். நான் இப்போது 'அரளிப்பூ' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். என்னுடைய மனைவியை காப்பாற்றும் வகையில் வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications