பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்... ஜனநாயகக் கடமையை ஆற்றிய கமல்
சென்னை: சென்னை தேனாம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடிகர் கமல்ஹாசன் கவுதமி, மகள் அக்ஷராவுடன் வந்து வாக்களித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.
இந்நிலையில் மே 16ம் தேதி சென்னையில் இருந்தால் ஓட்டுப் போடுவேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய கமல் நடிகை கவுதமி, மகள் அக்ஷராவுடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்திருக்கிறார்.

கமல்ஹாசன்
'சபாஷ் நாயுடு' படத்துவக்க விழாவின்போது "தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மே 16 ஆம் தேதி நான் இந்தியாவில் இருக்கப்போவது இல்லை. படப்பிடிப்புகாக லாஸ் ஏஞ்சலஸ் செல்ல இருக்கிறேன் என்று கூறி ஓட்டு சர்ச்சைக்கு கமல் திரி கிள்ளிப் போட்டார். மேலும் என்னுடைய ஓட்டை வேறு யாரவது போடலாம் எனக்கு ஏற்கனவே அந்த அனுபவம் இருக்கிறது என்றார்.

தேர்தல் ஆணையம்
இதைத்தொடர்ந்து கமல், கவுதமியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை போல, ட்வீட் செய்து நெட்டிசென்கள் தங்கள் ஆதங்கத்தைக் தீர்த்துக் கொண்டனர்.
|
2 நாட்களுக்கு முன்பு
2 நாட்களுக்கு முன்கூட மே 16ம் தேதி சென்னையில் இருந்தால் ஓட்டுப்போடுவேன் என்று கமல் கூறியிருந்தார். இந்நிலையில் வாக்குப்பதிவு தினமான இன்று கமல் நடிகை கவுதமி மகள் அக்ஷராவுடன் வந்து சென்னை தேனாம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில், தனது வாக்கினைப் பதிவு செய்திருக்கிறார்.

ஜனநாயகம்
வாக்களிப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல் ''வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பது ஜனநாயகத்தின் வலிமையை அதிகப்படுத்தும்'' என்று தெரிவித்தார். முன்னதாக அஜீத், ரஜினி ஆகியோர் தங்கள் வாக்குகளை முதல் ஆளாகப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications