என்னை கைது செய்ய சொல்லும் கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: கமல் அதிரடி!
தன்னை கைது செய்ய சொல்லும் கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தன்னை கைது செய்ய சொல்லும் கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். என்னை சிறையில் அடைத்து பார்க்க வேண்டும் என்பவர்களும் என் ரசிகர்கள்தான் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் எதிராக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும், நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கைது செய்வோம் என்றால் அது நடக்கட்டும்; சட்டம் என்னை பாதுகாக்கும் என்று அவர் கூறினர்.
என்னை கைது செய்ய வலியுறுத்தும் கூட்டத்திற்கு பதில் சொல்லும் கடமை எனக்கு கிடையாது என்றும் அவர் கூறினார். என்னை சிறையில் அடைத்து பார்க்க வேண்டும் என்பவர்களும் என் ரசிகர்கள்தான் என்றும் கமல்ஹாசன் கூறினார்.
இந்தி தெரியாமல் இருப்பதால் என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி புரியாமல் இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். என்னை நம்பும் மக்களுக்கு நல்ல விருந்து அளிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.