மிதக்கிறது குமரி மாவட்டம்... இன்னலில் தவிக்கும் மக்களுக்கு அனுதாபங்கள் தெரிவித்த கமல்!

மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம், இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் டுவீட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டம் மழையில் மிதக்கிறது, இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருக்கும் ஓகி புயலானது நேற்று இரவு முதல் கனமழை, காற்று என்று விடாமல் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. தொடர்ந்து வீசும் பேய்க்காற்றால் பல ஆயிரம் மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன, மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன.

Actor Kamalhaasan condoles for Kanyakumari people in his twitter page

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் இயற்கை இடர்பாடுகளை சமாளிக்க தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, மேலும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விரைந்துள்ளது.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தை வாட்டி எடுக்கும் ஓகி புயல் குறித்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம், இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+