சென்னையில் மாயமாகும் பச்சிளம் குழந்தைகள்... நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் பார்த்திபன் புகார் !
சென்னை: சாலையோரம் வசிக்கும் மக்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை மாநகர காவல் ஆணையரிடம், நடிகர் பார்த்திபன் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னையில் சாலையோரம் வசிப்போரின் குழந்தைகள் காணாமல் போவது தொடர் கதையாகி வருவதாக தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 30 நாட்களில் 2 கைக் குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சாலையோரம் வசிப்போர் வேலைக்கு சென்றுவிடும்போது, அவர்களது குழந்தைகள் பாதுகாப்பின்றி விடப்படுவதாகவும், இதனால், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், செய்தித்தாள்களில் நிறைய செய்திகள் இருக்கும் அதில் சில செய்திகள் சிலரை பாதிக்கும். என்னையும், லதா ரஜினிகாந்தையும் தெருவோர குழந்தைகள் காணாமல் போவது குறித்த செய்தி மிகவும் பாதித்தது. இதில் கொஞ்சம் அவசர நடவடிக்கையாக கவனம் செலுத்துமாறு காவல்துறையிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறோம்.
இந்த இடத்தில் தனித்து போட்டியிடமால் கூட்டணியாக போட்டியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். பார்த்திபன் மனிதநேய மன்றம், லதா ரஜினிகாந்தின் தயா ஃபவுண்டேஷன், எக்ஸ்நோரா நிர்மல் மற்றும் இன்னும் பல என்ஜிஓ-கள் இணைந்து இதற்கான ஒரு விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் என்று இணைந்து இருக்கிறோம்.
இது குறித்து முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறோம் "அம்மா குழந்தைகள் நல காப்பகம்" என்று தொடங்கலாம் என்று கேட்டு இருக்கிறோம் என்றார். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக, காவல் ஆணையர் டி.கே. ராஜேந்திரன் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications