வெளியாகிறது பிரகாஷ்ராஜ் எழுதிய புத்தகம்.. பி.பி. எகிற காத்திருக்கும் அரசியல்வாதிகள்
நடிகர் பிரகாஷ்ராஜ் எழுதிய புத்தகம் இம்மாதம் வெளியிடப்படவுள்ளதாகவும், அதில் பல சர்ச்சைக்குரிய கருத்துகள் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜ் எழுதிய புத்தகம் இம்மாதம் வெளியிடப்படவுள்ளதாகவும், அதில் நடப்பு அரசியல் குறித்து பல கருத்துகள் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கர்நாடகாவை சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜ் தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர். பல மொழிகள், பல கலாச்சாரம் என அனைத்தையும் கற்று தேர்ந்த இவர் சமீபகாலமாக அரசியலில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக மத்திய அரசை எதிர்ப்பதில் அவர் மும்முரம் காட்டி வருகிறார்.

மத்திய அமைச்சர், பிரதமர் என்று யாரையும் பாகுபாடில்லாமல் விமர்சிக்கும் பிரகாஷ்ராஜ், சமீபத்தில் தொலைகாட்சி ஒன்றில் பேசிய போது தான் பிஜேபிக்கு எதிரானவன் என்று பகிரங்கமாக அறிவித்தார். மேலும் குடிமகனாக யாரையும் கேள்வி கேட்கும் அதிகாரம் இருப்பதாக கூறிய அவர், "இருவுதெல்லவ பிட்டு" (இருப்பவை அனைத்தையும் விட்டுவிட்டு) என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
நாளை இந்த புத்தகத்தை வெளியிடவுள்ள அவர், அதில் ஏராளமான சமீபத்திய அரசியல் குறித்து பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய தாய்மொழியான கன்னடத்தில் இந்த புத்தகத்தை எழுதியுள்ள அவர், சில காரசாரமான பிரச்சனைகள் குறித்தும் மனம்விட்டு பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications