நமக்குள் எப்போது சண்டை வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.. ரஜினிகாந்த்
Recommended Video

சென்னை : ஒற்றுமை, ஒழுக்கம்,கட்டுப்பாடுடன் இருந்தால் போதும் மற்றதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். நமக்குள் எப்போது சண்டை வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர், அதற்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ்கார்டனில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் ரசிகர்களிடம் பேசினார். ரஜினி காணொலியில் பேசியது ராகவேந்திரா திருமண மண்டபம் உள்பட ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பட்டது.
மக்கள் மன்ற ரசிகர்களிடம் காணொலி மூலம் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது : நாம் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும், இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று அனைவரிடமும் நிரூபித்துக் காட்ட வேண்டும். இது ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கும் ஒரு வாய்ப்பு அதை நாம் பயன்படுத்திக் கொண்ண வேண்டும்.

குடும்பத்தை கவனியுங்கள்
உங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள், அவர்களை விட்டு விட்டு வந்து மக்கள்பணி செய்யுங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். எண்ணங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் பொறுப்புகளுடன் கூடுதலாக ஒரு பொறுப்பு இது என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

சண்டை வருமா என காத்திருக்கின்றனர்
எல்லோரும் நமக்குள் எப்போது சண்டை வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருந்தால் போதும் மற்றவற்றை ஆண்டவன் பார்த்துக் கொள்வான்.

ஒத்துழைப்பு தாருங்கள்
இந்த புதிய பயணத்திற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒற்றுமை இதை மட்டும் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும் மற்றதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ரஜினி பேசியுள்ளார்.

காலையில் ரசிகர்களுடன் பேச்சு
காவிரி நீர் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் காலையில் ரசிகர்களுடன் காணொலி காட்சி மூலம் ரஜினி பேசியுள்ளார். தமிழகத்தில் அரசியல் செய்யவரும் ரஜினி, காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு இழப்பும் கர்நாடகாவிற்கு சாதகமான தீர்ப்பும் வந்த நிலையில் ரஜினி இதுவரை இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications