For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நமக்குள் எப்போது சண்டை வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.. ரஜினிகாந்த்

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி தீர்ப்பு பற்றி வாய் திறக்காத ரஜினி என்ன செய்தார் தெரியுமா?- வீடியோ

    சென்னை : ஒற்றுமை, ஒழுக்கம்,கட்டுப்பாடுடன் இருந்தால் போதும் மற்றதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். நமக்குள் எப்போது சண்டை வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர், அதற்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ்கார்டனில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் ரசிகர்களிடம் பேசினார். ரஜினி காணொலியில் பேசியது ராகவேந்திரா திருமண மண்டபம் உள்பட ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பட்டது.

    மக்கள் மன்ற ரசிகர்களிடம் காணொலி மூலம் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது : நாம் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும், இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று அனைவரிடமும் நிரூபித்துக் காட்ட வேண்டும். இது ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கும் ஒரு வாய்ப்பு அதை நாம் பயன்படுத்திக் கொண்ண வேண்டும்.

    குடும்பத்தை கவனியுங்கள்

    குடும்பத்தை கவனியுங்கள்

    உங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள், அவர்களை விட்டு விட்டு வந்து மக்கள்பணி செய்யுங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். எண்ணங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் பொறுப்புகளுடன் கூடுதலாக ஒரு பொறுப்பு இது என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

    சண்டை வருமா என காத்திருக்கின்றனர்

    சண்டை வருமா என காத்திருக்கின்றனர்

    எல்லோரும் நமக்குள் எப்போது சண்டை வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருந்தால் போதும் மற்றவற்றை ஆண்டவன் பார்த்துக் கொள்வான்.

    ஒத்துழைப்பு தாருங்கள்

    ஒத்துழைப்பு தாருங்கள்

    இந்த புதிய பயணத்திற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒற்றுமை இதை மட்டும் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும் மற்றதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ரஜினி பேசியுள்ளார்.

    காலையில் ரசிகர்களுடன் பேச்சு

    காலையில் ரசிகர்களுடன் பேச்சு

    காவிரி நீர் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் காலையில் ரசிகர்களுடன் காணொலி காட்சி மூலம் ரஜினி பேசியுள்ளார். தமிழகத்தில் அரசியல் செய்யவரும் ரஜினி, காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு இழப்பும் கர்நாடகாவிற்கு சாதகமான தீர்ப்பும் வந்த நிலையில் ரஜினி இதுவரை இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Rajinikanth advised to makkal mandram fans through video conference that all should be united because others were waiting for the take when we will fight.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X