Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைவர் இப்பவாவது அரசியலில் புகுவாரா.. ரஜினி ரசிகர்கள் உற்சாக எதிர்பார்ப்பு!

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திக்க உள்ளதாக ரசிகர் மன்றம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது .

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இந்த மாதம் இறுதியில் ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினி | வீடியோ

    சென்னை : நடிகர் ரஜினிகாந்த் வருகிற டிசம்பர் 26ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.

    தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் கடந்த 12ம் தேதி கொண்டாடப்பட்டது . ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாள் அன்று ரசிகர்களை தொடர்ந்து தனது கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திப்பதை வழக்கமாக வைத்து இருந்தார்.

    ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களை சந்திக்கவில்லை. மேலும், அரசியலுக்கு வரும் அறிவிப்பு குறித்து வெளிப்படையாக எந்த அறிவிப்பும் செய்யாமல் இருந்ததால் அவரது ரசிகர்கள் உற்சாகமிழந்து காணப்பட்டனர்.

     ரஜினி ரசிகர்கள் ஆர்வம்

    ரஜினி ரசிகர்கள் ஆர்வம்

    தொடர்ந்து பல ஆண்டுகளாக் ரசிகர்களை சந்திக்காமல் இமயமலை சென்று வந்த ரஜினி. உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, தனதூ ரசிகர்களின் பிரார்த்தனையே தன்னை காப்பாற்றியதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினி அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், ரசிகர்களிடத்தில் பேசும் போது அரசியலுக்கான தேவை வந்திருப்பதாகவும், ஆனால் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றும் சொல்லி இருந்தார்.

     எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்கள்

    எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்கள்

    இந்நிலையில், பிறந்த நாள் அன்று ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானதால், கடந்த 12ம் தேதி பிறந்தநாளில் அவர் அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் அவரது போயஸ் கார்டன் வீட்டின் முன்னும், ராகவேந்திரா திருமணமண்டபம் முன்பும் குவிந்து இருந்தனர். ஆனால், அன்று ரஜினி தனது ரசிகர்களை சந்திக்கவில்லை. இதனால் மாலை வரை அவருக்காக காத்திருந்து ஏராளமானோர் மனம் சோர்ந்து போயினர்.

     ரசிகர் மன்றம் அறிவிப்பு

    ரசிகர் மன்றம் அறிவிப்பு

    இந்நிலையில், ரஜினி மீண்டும் வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. காலை எட்டு மணி முதல் மாலை மூன்று மணி வரை நடக்கும் இந்த சந்திப்பில், தினமும் சுமார் 1000க்கும் அதிகமான ரசிகர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வருவார்கள் என்பதால் ரசிகர் மன்றம் சார்பில் போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டு உள்ளது.

     அரசியல் குறித்த அறிவிப்பு

    அரசியல் குறித்த அறிவிப்பு

    இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆர்.கே நகர் தேர்தலுக்கு பிறகு இந்த சந்திப்பு நிகழ இருப்பதால், கண்டிப்பாக இந்த முறை ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். நிச்சயம் புத்தாண்டில் தங்களுடைய தலைவர் ரஜினி அரசியலில் களம் காண்பார் என்று ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+