Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காட்டுக்குள் கடத்தி சென்ற வீரப்பனை பற்றி நெகிழ்ந்த ராஜ்குமார்.. வீடியோவில் சொன்னது என்ன?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பன்... திக் திக் கதை

    ஈரோடு: வீரப்பன் என்னை அன்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொள்கிறார் என்று நக்கீரன் கோபாலிடம் அளித்த கேசட்டில் நடிகர் ராஜ்குமார் கூறியிருந்தார்.

    2000மாவது ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெங்களூரில் இருந்து தாளவாடி அருகே, மனைவி பார்வதம்மாவுடன் சென்ற கன்னட நடிகர் ராஜ்குமார், சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் மற்றும் அவர் கூட்டாளிகளால் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

    108 நாட்களுக்கு மேல் வனத்தில் வைத்திருந்து பிறகு விடுதலை செய்ததாகவும் வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் மீது கோபி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று இன்று நீதிபதி மணி தீர்ப்பு வழங்கினார்.

    இதனிடையே அரசு சார்பில் வீரப்பனிடம் தூது சென்ற நக்கீரன் கோபாலிடம் ராஜ்குமார் பேசிய வீடியோ கேசட் கொடுத்து அனுப்பப்பட்டது. அந்த கேசட்டில், ராஜ்குமார் உருக்கமாக பேசியிருந்தார்.

    வீடியோ கேசட்

    வீடியோ கேசட்

    மொத்தம் 25 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தக் கேசட்டில் ராஜ்குமார், கோபால் நடுவேயான உரையாடலும் பதிவாகியிருந்தது. ராஜ்குமார் கூறுகையில், காஜனூர் பண்ணை வீட்டில இருந்தோம். அப்போ அடையாளம் தெரியாத சிலர் வந்து யார் ராஜ்குமார்ன்னு கேட்டாங்க. நான் முதலில் வருமானவரி அதிகாரிகள் என்று நினைத்தேன். பெரிய மீசையைப் பார்த்தப்புறம் தான் வீரப்பன்னு தெரிஞ்சது.

    நானே வருகிறேன்

    நானே வருகிறேன்

    யாரையும் எதுவும் செஞ்சுடாதே வீரப்பா. நானே வந்து விடுகிறேன் என்று சொன்னேன். என் மனைவி வருத்தம் அடைந்தார். யாரும் சத்தம் போடவேண்டாம் என்றேன். அப்போது என்னுடன் இருந்த இவர்களையும் (அருகே இருந்தவர்களை காட்டுகிறார்) வீரப்பன் கடத்திக் கொண்டு வந்தார். நான் கடத்தப்பட்டதை ஒரு விபத்தாகக் கருதுகிறேன். ரசிகர்களும், வீட்டிலிருப்பவர்களும் கவலைப்படுவது சகஜம்தான். என்னை டெலிவிஷன் மூலம்பார்த்தால் அவர்களுக்கு கொஞ்சம் சந்தோஷம் கிடைக்கும்.

    நிம்மதியாக இருங்கள்

    நிம்மதியாக இருங்கள்

    நான் காட்டில் நலமுடன் இருக்கிறேன். நான் இங்கே நிம்மதியாக இருப்பது போல் நீங்கள் அங்கே நிம்மதியாக இருங்கள். ரசிகர்களுக்கு துக்கம் ஏற்பட்டுஇருப்பதும், தொந்தரவு ஏற்பட்டு இருப்பதும் சகஜம்தான். என்றாலும் அன்பு, பாசம் என்பவை நிலையானவை. உங்கள் அன்பினால் நான் கண்டிப்பாக நலமுடன் வந்து சேர்வேன்.

    கவலை வேண்டாம்

    கவலை வேண்டாம்

    வீரப்பன் என்னை மிகவும் அன்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொள்கிறார். இரண்டு மாநில முதல்வர்களும் வீரப்பனின் கோரிக்கைகளைபரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். அதற்கு தாய் ராஜராஜேஸ்வரி கருணை காட்ட வேண்டும். என் மனைவி மற்றும் எங்கள் உறவினர்கள் ரேடியோவில் பேசியதைக் கேட்டேன். அவர்களுக்கு சங்கடம் ஏற்பட்டிருக்கலாம். நான் உங்களைஎல்லாம் பார்க்க வருவேன். எனக்கு இது வாழ்வில் தேவையான அனுபவமாகத்தான் இருந்தது. யாரும் கவலைப்பட வேண்டாம் என்றார்.

    தமிழர்கள் பாதுகாப்பு

    தமிழர்கள் பாதுகாப்பு

    ராஜ்குமார் கடத்தப்பட்டபோது கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சம் இருந்தது. ஆனால், அப்படி ஏதும் நடக்காமல் இருக்க ராஜ்குமார் பேசிய இந்த கேசட்டும், விடுதலையான பிறகு, அவர் கன்னட அமைப்பினரை கட்டுப்படுத்தியதும் முக்கிய காரணங்களாகும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+