பாமக துணை தலைவராக நடிகர் ரஞ்சித் நியமனம்.. ராமதாஸ் அறிவிப்பு
Recommended Video

சென்னை: நடிகர் ரஞ்சித் பாமகவின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1993ம் ஆண்டு வெளியான பொன்விலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். சிந்துநதிப்பூ, மறுமலர்ச்சி, அவதார புருஷன், மைனர் மாப்பிள்ளை, பாண்டவர் பூமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் ரஞ்சித் நடித்துள்ளார்.
மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஏழையின் சிரிப்பில், என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.
பின்னர் திரை வாய்ப்புகள் இன்றி ஓய்வில் இருந்தார். இதையடுத்து, நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடிய, அதிமுக கட்சியில் இணைந்து, அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராகவும் வலம் வந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணியாக பிரிந்தது. அப்போது ஓபிஎஸ் அணியினருக்கு ரஞ்சித் ஆதரவு தெரிவித்திருந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன், பன்னீர்செல்வம் அணி இணைந்த பிறகு, அதிமுகவில் ஈடுபாட்டை குறைத்துக்கொண்டார் ரஞ்சித். இந்த நிலையில் கடந்த ஜூலை 23ம் தேதி, ரஞ்சித், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் பாமகவில் இணைந்தார்.
இந்த நிலையில், பாமக துணை தலைவராக ரஞ்சித்தை நியமித்து ராமதாஸ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடிகர்களின் அரசியல் வருகையை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் பாமகவின் துணை தலைவராக நடிகர் ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளது, முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications