விஜய் உடன் பாஜக கூட்டணி வைக்காது.. நடிகர் சரத்குமார் பரபரப்பு பேட்டி
சென்னை: விஜய் உடன் பாஜக கூட்டணி வைக்காது.. கூட்டம் கூடுவதெல்லாம் வாக்காக மாறி இருந்தால் நான் பரப்புரை செய்தவர்கள் தான் வெற்றி பெற்றிருந்திருப்பார்கள்.. பிரதமர் மோடி தலைமையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாட்டிற்கு நல்லது என்பதை உணர்ந்தாலே போதும். இந்தியா உலக அரங்கில் முதலிடத்திற்கு முன்னேறும் என்று நடிகரும் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் பேசினார். தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சிம்சோன் கபடி குழு நடத்திய 21 ஆவது ஆண்டு கபடி போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், "100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களுக்கு அதிகப்படுத்தினால் அதற்கும் திமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர். எந்த திட்டத்துக்கும் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவது கிடையாது.
தென்காசி சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு எடுக்க வேண்டும். அதன் பின்னர் நான் போட்டியிடுவது குறித்து நான் ஒரு முடிவு எடுக்க வேண்டும். அது பற்றி இரண்டு மாதங்களில் சொல்கிறேன். நடிகர் விஜயின் பொதுக்கூட்டங்களில் கூட்டம் அதிகமாக கூடுவது குறித்து கேட்கிறீர்கள்.. நான் பரப்புரை செய்த காலங்களில் இவ்வளவு செல்போன் தகவல் தொழில்நுட்பம் கிடையாது.
எனது கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்தனர். கூட்டம் கூடுவதெல்லாம் வாக்காக மாறி இருந்தால் நான் பரப்புரை செய்தவர்கள்தான் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ரஜினி, அஜித் வந்தால் கூட்டம் இதைவிட அதிகமாக இருக்கும். கூட்டம் வராவிட்டால் அது பற்றி தான் விஜய் கவலைப்பட வேண்டும். கூட்டணி குறித்து கேட்கிறீர்கள். தேர்தல் காலங்களில் கூட்டணி அமையும் போது தான் யார் எந்த பக்கம் என்பது தெரிய வரும் என்றார்.
பாஜக கூட்டணியில் விஜய் இணைவாரா என்று கேட்கிறீர்கள்.. விஜய் முதல்வர் ஆக வேண்டும் என்று அவரது கட்சியின் பொதுக்குழுவில் சொல்லிவிட்டார்கள். அப்படி என்றால் மற்றவர்கள் எல்லாம் அவர்களுக்கு கீழே இருக்க வேண்டுமா? விஜயுடன் பாஜக கூட்டணி வைக்காது என்பது எனது கருத்து. அதிமுகவினர் ஒன்றுபட்டால் சிறப்பாக இருக்கும்.
நாடு வலிமையாக இருக்க வேண்டுமென்றால் அதன் தலைவர் சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும். இன்றைக்கு பிரதமர் மோடி சக்தி மிக்க தலைவராக உள்ளார். இந்த தலைவரை வைத்துக்கொண்டு இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வாய்ப்புகள் உள்ளன. பிரதமர் மோடி தலைமையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாட்டிற்கு நல்லது என்பதை உணர்ந்தாலே போதும். இந்தியா உலக அரங்கில் முதலிடத்திற்கு முன்னேறும்.
போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக இருந்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறைக்கு உறுதியான அறிவுறுத்தல்களை முதலமைச்சர் வழங்க வேண்டும். எது நல்லது எது கெட்டது என்று சொன்னால் கூட இளைஞர்கள் அதனை கேட்கும் நிலையில் இல்லை. போதைப் பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கடுமையான தண்டனைகள் அவசியம்" என்று தெரிவித்தார்.
-
பெரம்பூரில் விஜய்க்கு எதிராக விஐபி வேட்பாளர்.. திமுக பெரிய பிளான்.. லிஸ்டிலேயே இல்லையே! -
சென்னை களம்! திமுகவுக்குச் சாதகமாக மாறும் விஜய்யின் வியூகம்? கமல் அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கலாமே -
சங்கீதாவால் வந்த சட்டச் சிக்கல்.. விஜய்யின் வேட்புமனு தள்ளுபடியாக வாய்ப்பு? வெளியான ஷாக் பின்னணி! -
விஜய் குடுமி சங்கீதா கையில்.. தேர்தலிலேயே நிற்க முடியாது? எலக்சன் நேரத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்! பரபர -
ஜனநாயகன் படம் பார்த்த மறு தணிக்கை குழுவினர்! தேர்தல் நடத்தை விதிகளால் எடுத்த முடிவு! -
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
சிபிஐயிடம் வசமாக சிக்கிய விஜய்? பிரசார வாகனம் 20 மீட்டர் தள்ளிப்போனது ஏன்? கரூர் நெரிசலில் ட்விஸ்ட் -
வரும் தேர்தலில் விஜய்யால் போட்டியிட முடியாதா? மனைவி சங்கீதா வைக்கும் செக்? லிஸ்ட்லயே இல்லாத ட்விஸ்ட் -
விஜய் மானத்தை வாங்கும் அருண்ராஜ்.. சில்வர் டப்பாவையடுத்து, பூஸ்ட் பாட்டில்! தவெக ஸ்டிக்கரை பாருங்க -
பொண்டாட்டி இருக்க, திரிஷா தேவையா? தெலுங்கு ரவி தேஜா படத்தின் வசனத்தில் உள்குத்து! பின்னணி சம்பவம் -
100ஆ ஹலோ கண்ட்ரோல் ரூமா? விஜய்யின் தவெகவை பாருங்க சார்.. நள்ளிரவில் தனலட்சுமியால் அலறிய கோவை போலீஸ் -
நடிப்புக்கு டாட்டா சொன்ன விஜய்.. மலையாளத்திற்கு மாற்ற துடிக்கும் நடிகை.. ரசிகர்கள் வைக்கும் ஒரே கோரிக்கை












Click it and Unblock the Notifications