இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான்.. நடிகர் சூர்யா !
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் நெருக்கடியான அரசியல் சூழல் குறித்து நடிகர் சூர்யா அதிரடி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். திமுகவினர் செய்த கடும் அமளிக்கு பிறகு அவர்களை வெளியேற்றிவிட்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். எதிராக 11 வாக்குகள் மட்டும் பதிவானதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் தற்போது ஒரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே.... என தெரிவித்துள்ளார்.
இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே....
— Suriya Sivakumar (@Suriya_offl) February 18, 2017
முன்னதாக நடிகர்கள் கமல், சித்தார்த் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.