முதலில் ஏசி.. அடுத்து சொகுசு கார்.. தொடர் மோசடியில் சின்னத்திரை நடிகையின் கணவர் கைது
Recommended Video

சென்னை: சொகுசு காரை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்டதாக சின்னத்திரை நடிகை அனிஷாவின் கணவர் சக்தி முருகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை நெசப்பாக்கம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் அனிஷா (27). இவர் பிரபல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளார். சில நாடகங்களிலும் நடித்துள்ளார்.ஸ்கை எக்யூப்மென்ட் என்ற நிறுவனத்தை கணவர் சக்தி முருகனுடன் சேர்ந்து நடத்தி வந்தனர். அதேபோல் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தையும் நடத்தினர்.
கடந்த ஏப்ரல் மாதம் தங்கள் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றுக்காக ரூ. 37 லட்சம் மதிப்பிலான 103 ஏசிக்களை கே.கே. நகரைச் சேர்ந்த பிரசாந்திடம் வாங்கினர். ஆனால் அதற்கான பணத்தை தராமல் இடித்தடித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இல்லை என திரும்பி வந்துவிட்டது.

குற்றவாளி
இதையடுத்து நேரில் போய் கேட்டபோது அனிஷாவும் சக்தியும் பிரசாந்துக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து கே கே நகர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் அனிஷா மற்றும் அவரது மைத்துனர் ஹரிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். எனினும் முக்கிய குற்றவாளியான சக்தி முருகன் தலைமறைவானார்.

வாடகைக்கு இயக்கம்
இந்நிலையில் இவர்கள் நெசப்பாக்கத்தில் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து ஆடி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட சொகுசு கார்களை தங்களது நிறுவனத்துடன் இணைந்து வெளியில் வாடகைக்கு இயக்கினர்.

வாடகைக்கு கார்
ஓஎல்எக்ஸில் தங்களுடைய கார்களை விற்பதாக கூறியவர்களை தொடர்பு கொண்ட சக்தி முருகனும் அவரது மேலாளர் ரமேஷும் தங்கள் நிறுவனத்தில் கார்களை இணைத்துக் கொண்டு கணிசமான தொகையை வாடகையாக பெறுங்கள் என கூறினர்.

சுருட்டிய தம்பதி
இதை நம்பி 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் சொகுசு கார்களை இணைத்து அனைத்து அசல் ஆவணங்களையும் நிறுவனத்தில் வழங்கியுள்ளனர். இதையடுத்து காரின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அந்த ஆவணங்களை அடகு வைத்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி விட்டு கடந்த மாதம் அந்த நிறுவனத்தை மூடிவிட்டனர்.

இடைத்தரகர் கைது
இதையடுத்து கார் உரிமையாளர்கள் 25 பேர் தங்களை ஏமாற்றியதாக கொடுக்கப்பட்ட புகாரில் எம்ஜிஆர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து மேலாளர் ரமேஷை கைது செய்தனர். கார் மோசடியில் தலைமறைவாக உள்ள சக்தி முருகன் மற்றும் ஹரீஷ் இன்னும் சிலரை போலீஸார் தேடிவந்த நிலையில், கார்களை சக்தி முருகனிடம் பெற்று வெளியே விற்றுகொடுத்த இடைத்தரகர் பாண்டியன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

கார் பறிமுதல்
அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்த 16 கார்களை போலீஸார் மீட்டனர். தலைமறைவாக இருந்த சக்திமுருகன் நேற்று சென்னை வந்துள்ளான் என போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சக்திமுருகணை போலீஸார் கைது செய்தனர் அவரிடமிருந்து பி.எம்.டபிள்யூ. கார் ஒன்றும் பறிமுதல் செய்யபட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications