யாகூப் தூக்குக்கு எதிர்ப்பு- மலையாள நடிகை அருந்ததியின் பக்கத்தை முடக்கியது பேஸ்புக்
சென்னை: மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கு தண்டனைக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரபல மலையாள நடிகை அருந்ததியின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட யாகூப் மேமன் கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யாகூப் மேமன் தூக்கு தண்டனைக்கு எதிராக பேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்பட சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க கூடாது என்று மத்திய அரசு எச்சரித்திருந்தது.

இதையடுத்து சமூக வலைதளங்களை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகையான அருந்ததி, யாகூப் மேமன் தூக்கு தண்டனைக்கு எதிராக தனது பேஸ்புக்கில் சில கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக அருந்ததியின் பேஸ்புக் மூடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனமே மேற்கொண்டுள்ளது. இது குறித்து நடிகை அருந்ததி கூறுகையில், "பேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும். தேவையில்லாத நிபந்தனைகளை விதித்ததன் மூலம் கருத்து சுதந்திரத்தை அபகரிக்கும் முயற்சி நடைபெறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications