யாகூப் தூக்குக்கு எதிர்ப்பு- மலையாள நடிகை அருந்ததியின் பக்கத்தை முடக்கியது பேஸ்புக்
சென்னை: மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கு தண்டனைக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரபல மலையாள நடிகை அருந்ததியின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட யாகூப் மேமன் கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யாகூப் மேமன் தூக்கு தண்டனைக்கு எதிராக பேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்பட சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க கூடாது என்று மத்திய அரசு எச்சரித்திருந்தது.

இதையடுத்து சமூக வலைதளங்களை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகையான அருந்ததி, யாகூப் மேமன் தூக்கு தண்டனைக்கு எதிராக தனது பேஸ்புக்கில் சில கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக அருந்ததியின் பேஸ்புக் மூடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனமே மேற்கொண்டுள்ளது. இது குறித்து நடிகை அருந்ததி கூறுகையில், "பேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும். தேவையில்லாத நிபந்தனைகளை விதித்ததன் மூலம் கருத்து சுதந்திரத்தை அபகரிக்கும் முயற்சி நடைபெறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம்












Click it and Unblock the Notifications