கருணாநிதிக்கு சிகிச்சையளிக்க கூடுதல் டாக்டர்கள் வரவழைப்பு.. மருத்துவ உபகரணங்களுடன் விரைந்தனர்
Recommended Video

சென்னை: கருணாநிதிக்கு சிகிச்சையளிக்க கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் லேசான நலிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறு நீர் பாதையில் ஏற்பட்ட நோய் தொற்று மற்றும், வயோதிகம் காரணமாக அவருக்கு நலிவு ஏற்பட்டுள்ளது என்று காவிரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பபட தமிழக அமைச்சர்கள் பலரும் நேற்று இரவு கோபாலபுரம் இல்லம் சென்று ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
நேற்று 2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கருணாநிதிக்கு சிகிச்சையளித்து வந்தனர். இந்த நிலையில், காவிரி மருத்துவமனையின் கூடுதல் டாக்டர் குழு கோபாலபுரம் இல்லத்திற்கு இன்று காலை வந்தது. கூடுதலாக 4 மருத்துவர்கள் சிகிச்சையளிக்க சென்றனர். அவர்கள் மருத்துவ உபகரணங்களையும் கொண்டு வந்தனர்.
கூடுதல் மருத்துவர்கள், சிகிச்சையளித்த பிறகு நோய் தொற்று ஒருவேளை குறையாவிட்டால், காவிரி மருத்துவமனைக்கு கருணாநிதியை அழைத்து செல்ல மருத்துவர்கள் திட்டமிடக்கூடும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications