சசிகலாவை ஆதரித்த கையோடு முதல்வரை பார்த்த மூவர் அணி.. பேரறிவாளன் பரோலுக்கு நன்றி
ராஜீவ் கொலையில் 27 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுத்திருப்பதற்கு தமிழக அரசுக்கு அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சென்னை : பேரறிவாளனை பரோலில் விட்டதற்கு முதல்வர் பழனிசாமிக்கு அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பேரறிவாளன் சுமார் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று பேரறிவாளனின் தாயர் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். கடந்த சட்டசபை கூட்டத்தின் போது தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் கொடுக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் ஜோலார்பேட்டை அருகில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். இது குறித்து அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் கூடி ஆலோசித்தனர்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமியை சந்தித்து அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் பேரறிவாளனை பரோலில் விடுவித்ததற்கு நன்றி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அவர்கள் ஆலோசித்தாக தெரிகிறது.
ஏனெனில் இந்த சந்திப்பிற்கு முன்னர் எம்எல்ஏக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன் தரப்பை அழைத்து முதல்வர் பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். எனவே இது குறித்தும் முதல்வரிடம் அவர்கள் எடுத்துக் கூறுவார்கள் என்று தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications