இங்கேயே இருங்க.. எங்கேயும் போகாதீங்க.. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு
சென்னையை விட்டு வெளியேற வேண்டாம் என்று தனது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அதிமுக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சென்னை: சசிகலாவை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுத்துள்ள அதிமுக, தற்போது தனது கட்சி எம்.எல்.ஏக்களை சென்னையிலேயே இருக்குமாறு உத்தரவிட்டுள்ளதாம்.
முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் அகால மறைவைத் தொடர்ந்து சசிகலா படு வேகமாக வெளிச்சத்திற்கு வந்து விட்டார். முதலில் போயஸ் தோட்ட இல்லத்தை சசிகலா குடும்பத்தினர் முழுமையாக பயன்படுத்த ஆரம்பித்தனர். அடுத்து ஜெயலலிதாவின் பொதுச் செயலாளர் பதவியை சசிகலா பிடித்தார். ஜெயலலிதா போலவே கெட்டப்பையும் மாற்றினார். ஜெயலலிதா போலவே நடக்கிறார், போஸ் கொடுக்கிறார், நிறுத்தி நிதானமாக பேசுகிறார்.

இந்த நிலையில் தற்போது ஜெயலலிதா போலவே அழர் வகித்து வந்த முதல்வர் பதவியையும் பிடித்து விட்டார். இன்று கூடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்து விட்டது அதிமுக. தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக இதற்கு எதிராக இருந்தும் கூட தங்களுக்குரிய சட்ட அதிகாரத்தை வைத்து சசிகலாவை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுத்து விட்டனர் அதிமுகவினர்.
இந்த நிலையில் அடுத்தடுத்த வேலைகளில் சசிகலா தரப்பு இறங்கி விட்டது. முதல் கட்டமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னையை விட்டு வெளியேறக் கூடாது என்று தடை போடப்பட்டுள்ளதாம். சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். அவர்களை கண்காணிப்பில் கட்சி மேலிடம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சசிகலா எதிர்ப்பாளர்களால் கட்சி பிளவுபடலாம் என்று ஏற்கனவே செய்திகள் பரவியுள்ள நிலையில் முதல்வராகும் வரை எந்தக் குழப்பமும் வந்து விடக் கூடாது என்பதால்தான் இந்த உத்தரவாம். இதனால் சென்னையிலேயே தங்கியுள்ளனராம் எம்.எல்.ஏக்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications