சசிகலா குடும்பத்தால் சின்னாபின்னமான ஜெ. வீடு.. ரூம் ரூமாக ரெய்டு.. பேரதிர்ச்சியில் அதிமுகவினர்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா குடும்பத்து சகவாசத்தால் தங்களது அபிமானத்துக்குரிய ஜெயலலிதாவின் வீட்டில் இப்படி சல்லடை போட்டு வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருவது அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.

கடந்த ஒரு வருடமாகவே அதிமுகவினர் நொந்து நூடூல்ஸாகிப் போயுள்ளனர். ஜெயலலிதாவின் கடைசிக் காலம் மகா மோசமாக இருந்தது ஒரு பக்கம், அவரது மர்ம மரணம் மறுபக்கம் என நொந்து போய் விட்ட அவர்கள் கடந்த ஒரு வருடமாக நடந்து வரும் கூத்துக்களால் வெறுத்துப் போயுள்ளனர். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை அவர்களால், நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.,

x

ADMK cadres shocked over the IT Raids in Poes Garden

இந்த நிலையில் இன்று ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 21 வருடத்திற்குப் பிறகு சோதனை நடப்பது அதிமுகவினரை அதிர வைத்துள்ளது. ஜெயலலிதா மீது ஊழல் புகார்கள் எழுந்தபோது 1996ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ரெய்டு நடந்தது. அதன் பிறகு இப்போது மீண்டும் ரெய்டு நடக்கிறது.

1996ம் ஆண்டு 5 நாட்கள் ரெய்டு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் முடியவுள்ள நிலையில் இப்போது ரெய்டுக்குள்ளாகியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டுக்கு முன்பு அதிமுகவினர் குவிந்துள்ளனர்.

ரூம் ரூமாக அதிகாரிகள் சோதனையிட்டு வருவதாக கூறப்படுகிறது. சசிகலா அறை, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அறை என அறை அறையாக ரெய்டு நடக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் இந்த சசிகலா குடும்பம் என்பதால் அதிமுகவினர் கடும் கோபமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+