பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் அதிமுக போட்டி.. 7 வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் ஜெ.
சென்னை: பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் அதிமுக 7 வார்டுகளில் போட்டியிடும் என்று கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிமுக ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி, கர்நாடக மாநிலத்தில் 22.8.2015 அன்று நடைபெற உள்ள பெங்களூரு பெரு மாநகராட்சித் தேர்தலில், அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பதவிகளுக்கு நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
96வது வார்டு (ஓக்லிபுரம்)
சுப்பிரமணி (கர்நாடக மாநில ஜெ.ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)
120வது வார்டு, (காட்டன்பேட்)
சுந்தரமூர்த்தி, (கர்நாடக மாநில ஜெ.ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்)
சுபாஷ் நகர்
குமார் (பெங்களூரு மாவட்டக் கழகச் செய லாளர்)
ஹோய்சால நகர்
சிம்சன் சண்முகம் (அண்ணா தொழிற்சங்க முன்னாள் செயலாளர்)
48வது வார்டு, (முனீஸ்வரா நகர்)
துளசி அன்பரசன் (புலிகேசி நகர்) (ராமர் கோவில் தெரு, பெரியார் நகர், பெங்களூரு)
60வது வார்டு, (சகாயபுரம்)
சகாயராஜ் (சகாயபுரம்)
170வது வார்டு, (ஜெயநகர்)
முருகேஷ் (ஜெயநகர், பெங்களூரு) என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications