மீஞ்சூர் அருகே 3 தேமுதிக நிர்வாகிகளை வழிமறித்து அரிவாளால் வெட்டிய 2 அதிமுகவினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீஞ்சூர் அருகே தேமுதிகவினர் 3 பேரை வழிமறித்து அதிமுக நிர்வாகிகள் இருவர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

மீஞ்சூர் அருகே இருக்கும் செங்கழுநீர்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கே. சுதாகர், எஸ்.சுதாகர், பாபு. தேமுதிக நிர்வாகிகளான அவர்களுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளான கமலேஷ், பிரகாஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படும்.

இந்நிலையில் அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொண்டுவிட்டு சுதாகர் உள்ளிட்ட 3 பேரும் இரவு நேரத்தில் நடந்து சென்றபோது பிரகாஷும், கமலேஷும் அவர்களை வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் அந்த 3 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

வலியால் துடித்த அவர்களின் அலறல் கேட்டு பொதுமக்கள் வந்ததால் அந்த 2 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். அரிவாள் வெட்டுப்பட்டுக் கிடந்த அந்த 3 பேரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கமலேஷ் மற்றும் பிரகாஷை தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+