வீடுகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக் கடைகளையும் மூட அரசு திட்டம்?
சென்னை: தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா முதல் கட்டமாக 500 மதுக் கடைகளை மூடவும், கடை நேரத்தை குறைக்கவும் நேற்று உத்தரவிட்டார். ஆனால் மூடப்பட வேண்டிய கடைகள் பட்டியலில் மேலும் பல நூறு கடைகள் இருப்பாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக டாஸ்மாக் சார்பில் அரசிடம் ஏற்கனவே அறிக்கை கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதிலிருந்து 500 கடைகளை முதல் கட்டமாக அரசு மூட விருப்பதாகவும் டாஸ்மாக் சார்பில் சொல்லப்படுகிறது.
இந்தப் பட்டியலில் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் உள்ள கடைகளின் பட்டியலும் அடக்கமாம். எனவே இந்தக் கடைகளும் படிப்படியாக மூடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எந்தெந்த கடைகள் மூடப்படும்?
முதல் கட்டமாக மூடப்படவுள்ள 500 கடைகளும் நகர்ப்புறத்தில் உள்ள கடைகளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் நகர்ப்புறங்களில் அதிக அளவில் கடைகள் உள்ளன. எனவே முதலில் அவற்றில் கை வைக்க ஜெயலலிதா முடிவெடுத்துள்ளாராம்.

நெருக்கமாக உள்ள கடைகள்
பக்கத்து பக்க்தில் உள்ள கடைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அருகருகே உள்ள கடைகள் முதல் கட்டமாக மூடப்படுமாம். அதுபோன்ற கடைகள்தான் இந்த 500 கடை பட்டியலில் பெரும்பாலும் இடம் பெற்றுள்ளதாம்.

கிராமப்புறங்களில் கடைகள் குறைவு
டாஸ்மாக் அதிகாரிகள் சிலர் கூறுகையில், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் கடைகள் குறைவு. எனவேதான் முதலில் நகர்ப்புற கடைகளில் இந்த நடவடிக்கையை அரசு எடுப்பதாக தெரிகிறது என்றார்.

குடியிருப்புகள்
குடியிருப்புகள், பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடம், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளையும் பட்டியல் போட்டுக் கொடுத்துள்ளோம். அவற்றையும் மூட அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது என்றனர்.

500க்கு மேல் வருமாம்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மண்டலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இதுபோன்ற கடைகளை ஏற்கனவே பட்டியல் போட்டு அரசிடம் கொடுத்து விட்டனராம். இதில் 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளனவாம். எனவே படிப்படியாக மீதமுள்ள கடைகளும் கூட மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் 2வது கட்டம்
அனேகமாக ஆகஸ்ட் 15ம் தேதி அல்லது அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி இரண்டாம் கட்ட நடவடிக்கையை (கடைகள் மூடலை) முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications