For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

6 பேரும் அநாதரவாகப் போன அதிமுக தலைமையகமும்!

தேர்தல் வெற்றியை திகுடு முகுடாக கொண்டாடும் அதிமுக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் காற்றாடுகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபைத் தேர்தலோ, இடைத்தேர்தலோ முடிவுகள் அறிவிக்கப்பட்டால் அதிமுக தலைமை அலுவலகம் அதகளப்படும். காரணம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே சட்டசபை, இடைத்தேர்தல்களில் வெற்றியை மட்டுமே சுவைத்துள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் இனிப்புகள், பட்டாசுகள், கொண்டாட்டங்கள் தூள் பறக்கும். எல்லாம் ஜெயலலிதா இருந்த வரைதான். இபபோது ஜெயலலிதா இல்லாத அதிமுக இப்போது துடுப்பு இல்லாத படகு போல மாறிவிட்டது.

ADMK HQ looks deserted

முதன் முறையாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை வாடத் தொடங்கியுள்ளது. இது அதிமுக தொண்டர்களிடையே மன வாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் இந்த நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மொத்தம் 6 பேர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவினர் சோக கீதம் பாட... தலைமை அலுவலகமோ பாலைவனம் போல மாறியுள்ளது.

English summary
ADK HQ is deserted by the workers and leaders as Dinakaran is leading in the RK Nagar constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X