ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சதி.. நவநீதகிருஷ்ணன் குற்றச்சாட்டு
சட்டத்தை மீறாமல் எங்கும் தங்கி இருக்க எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை உள்ளது என்றும் ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சிலர் சதி செய்வதாகவும் அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: கூவத்தூர் விடுதியில் இருந்து எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சதி நடப்பதாக நாடாளுமன்ற அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இரு தினங்களாக கூவத்தூர் சென்று பேசி வந்த சசிகலா, நேற்று இரவு முதல் அங்கேயே தங்கியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்தது. அதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு கலைந்தது.
இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டசபைக்குழு தலைவராக எம்எல்ஏக்கள் தேர்வு செய்துள்ளனர். இன்று மாலை ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். இதனிடையே கடந்த ஒரு வாரகாலமாக எம்.எல்.ஏக்கள் சட்டவிரோதமாக ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன். அப்போது அவர் கூறுகையில், அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் சுதந்திரமாக உள்ளோம். எங்களை யாரும் அடைத்து வைக்கவில்லை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அதனால் இங்கு தங்கியுள்ளோம். எம்.எல்.ஏக்கள் அனைவரும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள்.
சட்டத்தை மீறாமல் எங்கும் தங்கி இருக்க எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை உள்ளது. ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சிலர் சதி செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications