"போடுங்கம்மா ஓட்டு"... தூத்துக்குடியில் தேர்தல் சுறுசுறுப்பு.. விறுவிறுப்படையும் அதிமுக பிரசாரம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத் தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவினர் சுறுசுறுப்பாக இறங்கி விட்டனர். தெருத் தெருவாக வீதி வீதியாக சென்று அவர்கள் மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அந்தோணி கிரேசி வீதிவீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்த சசிகலாபுஷ்பா மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் தூத்துக்குடி மாநகராட்சி பொறுப்பு மேயராக சேவியர் பதவி வகித்தார்.

செப்டம்பர் 18ல் தேர்தல்
இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் காலியாகவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருந்தது.

அந்தோணி கிரேசி
இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளராக அந்தோணி கிரேசி அறிவிக்கப்பட்டார். அவர் தற்போது பிரசாரத்தைத் தொடங்கி விட்டார்.

சிவன் கோவிலிலிருந்து
தூத்துக்குடி சிவன்கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்கினார் கிரேசி. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன், மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா ஆகியோருடன் இணைந்து பிரச்சாரத்தை துவங்கிய மேயர் வேட்பாளர் அந்தோணிகிரேசி தூத்துக்குடி மாநகராட்சியின் முக்கிய வீதிகளில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

உற்சாகத்தில் அதிமுக
நிச்சயம் நமக்குத்தான் வெற்றி என்ற பெருமிதத்துடன் இப்போதே அதிமுகவினர் பிரசாரத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications