For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறப்பு பேச்சாளர் மீது செருப்பு வீச்சு... அதிமுக பொதுக் கூட்டத்தில் பரபரப்பு !

By Karthikeyan
Google Oneindia Tamil News

திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக சிறப்பு பேச்சாளர் மீது செருப்பு வீச்சப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனறுமான எம்ஜிஆரின் 99 - பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் திண்டிவனத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் அக்கட்சியின் சிறப்பு பேச்சாளர் முன்னாள் எம்எல்ஏ தீரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்திலிருந்து திடீரென ஒருவர் ஒருவர் செருப்பை வீசினார்.

ADMK meeting in Tindivanam

அப்போது செருப்பு வீசியவரை பிடித்த அதிமுகவினர் அவருக்கு தர்மஅடி கொடுத்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த திண்டிவனம் போலீசார் இடையில் புகுந்து அவரை மீட்டனர். போலீசார் விசாரணையில் அவர் பாமகவைச் சேர்ந்த செல்வம் என தெரிய வந்தது.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது. இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Admk spokes person Attacked with Footwear in Tindivanam meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X