For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில் நீர் பாட்டில்களை தட்டிப்பறித்த அதிமுகவினர்: அம்மா ஸ்டிக்கர் ஒட்டத் தான்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் ஐஆர்சிடிசி அனுப்பி வைத்துள்ள ஒரு லட்சம் ரயில் நீர் பாட்டில்களை அதிமுகவினர் மிரட்டி பறித்துக் கொண்டு அதில் அம்மாவின் ஸ்டிக்கரை ஒட்டி வினியோகிப்போம் என்று அடம் பிடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு 1 லட்சம் ரயில் நீர் பாட்டில்களை அனுப்பி வைக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சகம் ஐஆர்சிடிசிக்கு உத்தரவிட்டது. அதன்படி ஒரு லட்சம் பாட்டில்கள் சென்னைக்கு வந்துள்ளன.

சென்னைக்கு வந்துள்ள பாட்டில்களை மக்களுக்கு வழங்க விடாமல் அதிமுகவினர் பிரச்சனை செய்து வருகிறார்களாம். பாட்டில்கள் அனைத்திலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி அவர் பெயரில் தான் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறி அவற்றை பறித்துக் கொண்டுள்ளார்களாம்.

இதனால் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று வெளிமாநிலங்களில் இருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளையும் அதிமுகவினர் மறித்து பொருட்களில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டியனுப்பி வருகிறார்கள்.

அதிமுகவினரின் இந்த செயலால் வெளி மாநிலங்களில் இருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் நபர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

சென்னை:

ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் ஐஆர்சிடிசி அனுப்பி வைத்துள்ள ஒரு லட்சம் ரயில் நீர் பாட்டில்களை அதிமுகவினர் மிரட்டி பறித்துக் கொண்டு அதில் அம்மாவின் ஸ்டிக்கரை ஒட்டி வினியோகிப்போம் என்று அடம் பிடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு 1 லட்சம் ரயில் நீர் பாட்டில்களை அனுப்பி வைக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சகம் ஐஆர்சிடிசிக்கு உத்தரவிட்டது. அதன்படி ஒரு லட்சம் பாட்டில்கள் சென்னைக்கு வந்துள்ளன.

சென்னைக்கு வந்துள்ள பாட்டில்களை மக்களுக்கு வழங்க விடாமல் அதிமுகவினர் பிரச்சனை செய்து வருகிறார்களாம். பாட்டில்கள் அனைத்திலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி அவர் பெயரில் தான் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறி அவற்றை பறித்துக் கொண்டுள்ளார்களாம்.

இதனால் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று வெளிமாநிலங்களில் இருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளையும் அதிமுகவினர் மறித்து பொருட்களில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டியனுப்பி வருகிறார்கள்.

அதிமுகவினரின் இந்த செயலால் வெளி மாநிலங்களில் இருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் நபர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

English summary
ADMK men have reportedly grabbed rail neer bottles inorder to distribute under Amma's name.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X