அதிமுகவினர் தொகுதிக்கு ரூ.5கோடி பதுக்கியுள்ளனர்: ஈவிகேஎஸ். இளங்கோவன் புகார்
மதுரை: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் ரூ.5 கோடி வரை அதிமுகவினர் பணம் பதுக்கி வைத்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் ரூ.5 கோடி வரை அதிமுகவினர் பணம் பதுக்கி வைத்துள்ளதாக புகார் தெரிவித்தார். எனவே வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்டவற்றின் மூலமாக பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும் கூறிய இளங்கோவன், தேர்தல் நேரத்தில் இதுபோன்ற பணப்பட்டுவாடா நிகழ்வுகளை தடுக்க தேர்தல் ஆணையம் ராணுவ உதவியுடன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் உடல்நிலை சரியில்லாததால் ராகுல் காந்தியின் தமிழக பிரச்சாரத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications