மோடி எபெக்ட்... இடைத்தேர்தலில் வைட்டமின் ப விநியோகிக்கும் அதிமுகவினர் அப்செட்
3 தொகுதி இடைத்தேர்தலில் வைட்டமின் ப விநியோகம் செய்யும் அமைச்சர்கள் அப்செட்டில் இருக்கிறார்களாம்.
சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததால் மூன்று இடைத்தேர்தல்களிலும் தேர்தல் பணியில் இருக்கும் அதிமுக பிரமுகர்கள் அப்- செட் ஆகியிருக்கிறார்களாம்.
கீழ்நிலைப்பொறுப்பாளர்கள் பலரும் தொகுதியை விட்டு சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பியுள்ளனர் என்கிறார்கள் ர.ர.க்கள். காரணம் என்ன என்பது குறித்து விசாரித்த போது, வாக்குகளை பர்ச்சேஸ் செய்வதற்காக,ஆயிரம், ஐநூறு நோட்டுக்களை ரகசியமாக கொடுத்தால் அதனை மக்கள் வாங்க மறுப்பதாகவும்,. செல்லாத நோட்டுக்களை ஏன் தருகிறீர்கள் என விவாதம் செய்கிறார்களாம்.

டிசம்பர் 30 வரை மாற்றிக்கொள்ளலாம் என சொன்னாலும் மக்கள் நம்ப மறுக்கின்றனர். செல்லுகிற நோட்டைக்கொடுங்கள் என கேட்கின்றனர். இல்லையெனில் பொருட்களாக கொடுங்கள் என் கேட்கின்றனர். அதனால், புதிய 500 ரூபாய் அல்லது நூறு ரூபாய் நோட்டுக்களை சேகரித்து வருவதற்காக நிர்வாகிகளை அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று விவரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications