போயஸ் கார்டன் ரெய்டு.. திண்டுக்கல் சீனிவாசனும், தம்பிதுரையும் வேற மாதிரி பேசுறாங்களே!
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை பற்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை எம்பி இருவரும் முரண்பட்ட கருத்துகளை கூறியுள்ளனர்.
Recommended Video

பழனி : ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை எம்பி இருவரும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிக் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அறையில் தொடங்கிய சோதனை வேதா நிலையத்தில் ஜெயலலிதாவின் அறையை தவிர மற்ற எல்லா இடங்களிலும் நடந்தது. வருமான வரி சோதனை குறித்து அதிமுகவினர் முரண்பட்ட கருத்துகளை கூறி வருகின்றனர்.

பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வருமான வரித்துறை தனது கடமையைத் தான் செய்தது. சட்டத்திற்குட்பட்டே வருமான வரித்துறையின் சோதனை நடந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை ஜெயலலிதா வாழ்ந்த வீடு புனிதமானது என்று வறியுள்ளார். ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யார் நடந்து கொண்டாலும் ஏற்கமாட்டோம். இந்த வருமான வரி சோதனை குறித்து முதல்வரிடம் பேச உள்ளேன் என்று தமிபிதுரை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications