சக்திவாய்ந்த வெடிகள் உபயோகிப்பதாக குவாரியில் சோதனை - சிக்கலில் அதிமுக அமைச்சர்!
Subscribe to Oneindia Tamil
புதுகை: புதுக்கோட்டையில் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான குவாரில் தீவிர சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பிலும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் ஆளும் அதிமுக கட்சி அமைச்சர் ஒருவருக்கு சொந்தமாக கல் குவாரி மற்றும் கிரஷர் உள்ளது. இந்த குவாரியில் அதிக சக்தியுள்ள வெடிகள் வெடித்து பாறைகள் உடைக்கப்படுவதாக புகார் எழுந்தது.

மேலும், அதன் தாக்கத்தால் பக்கத்தில் உள்ள குவாரிகள் பாதிக்கப்படுவதாகவும் அருகில் உள்ள குவாரியினர் புகார் செய்ததையடுத்து கடந்த 2 நாள்களுக்கும் மேலாக அதிகாரிகள் குவாரியில் ஆய்வு நடத்தியுள்ளனர்.
ஆய்வில் புகார் பற்றிய விபரம் உண்மையென தெரியவந்துள்ளது. அதனால் என்ன நடவடிக்கை வருமோ என்று அமைச்சர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் உள்ளதாக அதிமுக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications