தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு... சட்டசபையில் அதிமுகவினரின் ஆரவாரமும், அமைதியும்
தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வரும் போது சட்டசபையில் அதிமுகவினர் ஆரவாரம் செய்தும் அமைதி காத்தும் இருந்தனர்.
Recommended Video

சென்னை: தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வரும் போது முதலில் சாதகமாக வந்ததை அதிமுகவினர் ஆரவாரம் செய்தும் மாறுபட்ட தீர்ப்பு வந்ததை அடுத்து அமைதி காத்தும் வெளிப்படுத்தினர்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வந்தது. அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

இதை தமிழ்நாடே எதிர்பார்த்து காத்து கிடந்தது. தீர்ப்பு தினகரன் அணிக்கு சாதகமாக வந்தால் ஆட்சி கலையும் என்பதால் இந்த தீர்ப்பை அனைவரும் உற்று நோக்கியிருந்தனர்.
அதுபோல் சட்டசபையிலும் அதிமுகவினர் தீர்ப்பை கவனித்தனர். அப்போது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று இந்திரா பானர்ஜி தீர்ப்பை வாசித்தபோது அதிமுகவினர் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து மற்றொரு நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பை வாசித்தார். அதில் இந்திரா பானர்ஜியின் தீர்ப்பிலிருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் அதிமுகவினர் ஆரவாரத்தை நிறுத்திவிட்டு அமைதி காத்தனர்.












Click it and Unblock the Notifications