'ரத்தத்தின் ரத்தமாக' ஒரு வாய்ப்பு... 11ம் தேதி முதல் அதிமுக உறுப்பினர் சீட்டு விநியோகம்!
சென்னை: அதிமுகவில் புதிய உறுப்பினராவதற்கான உறுப்பினர் அட்டை ஜூன் 11ம் முதல் வழங்கப்படும் என்று கட்சி பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான பணிகள் கடந்த 13.6.2013 அன்று தொடங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 6.8.2013 வரை தலைமைக் கழகத்தில் பெறப்பட்டன.

அதில் 30.7.2013 வரை பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தின் வழங்கி, ரசீது பெற்றுள்ள அனைவருக்கும் உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது, 31.7.2013 முதல் 5.8.2013 வரை உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பித்து உள்ளவர்களுக்கும், 13.6.2013 முதல் 6.8.2013 வரை உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி பண அஞ்சல் மூலம் உரிய கட்டணத் தொகையுடன் விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்து உள்ளவர்களுக்கும்; கழக உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி அதற்கான விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்துள்ள அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வருகின்ற 11.6.2014 (புதன் கிழமை) காலை 9 மணி முதல் புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும்.
ஆகவே, கழக உடன்பிறப்புகள் உரிய ரசீதுகளை தலைமைக் கழகத்திற்கு கொண்டு வந்து காண்பித்து அவரவர்களுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications