For Daily Alerts
Just In
அதிமுகவினர் திடீர் சாலைமறியல்- நெல்லித்தோப்பில் பரபரப்பு
நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் அதிமுகவினர், திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 26 வாக்குச்சாவடிகளும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் சாரம் வாக்குச்சாவடி அருகே நூற்றுக்கணக்கான அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேறு தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் குவிந்ததை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதிமுகவினரை கலைந்து போகச் செய்தனர்.
Comments
English summary
AIADMK cadres led by party nominee Om Sakthi Sekar stage a road roko at Saram in Nellithope protesting Model Code of Conduct violation by Chief Minister V Narayanasamy.
Story first published: Saturday, November 19, 2016, 12:12 [IST]