நாமக்கல் ஜெயலலிதா பிரச்சாரத்தில் தக்காளி சாதம் சாப்பிட்ட தொண்டர்கள் 15 பேர் மயக்கம்
நாமக்கல்: நாமக்கல்லில் அதிமுக கூட்டத்திற்கு வந்த போது தக்காளி சாதம் உட்கொண்ட 15 அதிமுக தொண்டர்கள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப் பட்டு சிகிச்சைக்காக நாமக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாமக்கல் லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நேற்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசார கூட்டத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இப்பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக குமாரபாளையம் அருகே உள்ள கொளத்துக்காடு பகுதியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் ஒரு பஸ்சில் வந்திருந்தனர். இவர்களுக்கு மதியம் 2 மணி அளவில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது. 3 மணி அளவில் கூட்டம் முடிவடைந்தாலும், இவர்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்து இருந்த தனியார் பஸ் வராத காரணத்தால், அங்கேயே காத்திருந்தனர்.
அப்போது திடீரென அவர்களில் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை அமைச்சர் தங்கமணி, நாமக்கல் சட்டசபை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications