Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்.கே நகரில் இன்று இரவுக்குள் என்ன நடக்கப்போகிறது தெரியுமா? தினகரன் பகீர்

ஆர்.கே நகரில் இன்று இரவுக்குள் ரூ120 கோடி பட்டுவாடாவுக்கு ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாக டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆர்கே நகரில் இன்று இரவு பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடைபெற உள்ளது- தினகரன் பகிர்- வீடியோ

    சென்னை : ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் இன்று இரவுக்குள் 120 கோடி ரூபாயை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாக தினகரன் தெரிவித்து உள்ளார்.

    ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை ஐந்து மணியோடு நிறைவடைந்தது.

    இறுதிநாள் பிரச்சாரத்தில் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களது கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இன்று களம் இறங்கியதால், தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்தது. முக்கியமாக சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி தினகரனுக்கு பிரம்மாண்டமான அளவில் கூட்டம் கூடியது.

     இறுதி கட்ட பிரசாரம்

    இறுதி கட்ட பிரசாரம்

    டி.டி.வி தினகரன் பிரச்சாரம் செய்த வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் மக்கள் அதிக அளவில் கூடியதால், இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து அந்தப்பகுதியில் ஸ்தம்பித்தது. அதே போல, காசிமேடு பகுதியில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் தனது கட்சி வேட்பாளர் மருதுகணேஷுக்கு வாக்கு சேகரித்தார்.

     சளைக்கவில்லை

    சளைக்கவில்லை

    பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், ஆர்.கே நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன், தொகுதிக்குள் இதுவரை அ.தி.மு.க.ம்வினர் கட்சி வேஷ்டி அணிந்து போலீஸ் பாதுகாப்போடு பல இடங்களில் கோடிக்கணக்கான பணத்தை விநியோகம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி பல புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

     அதிர்ச்சியாம்

    அதிர்ச்சியாம்

    இவர்கள் ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாய்க்கு மேலாக அளித்தும் எனக்கு கூட்டம் கூடுவதை கண்டு ஆளும்கட்சி அதிர்ச்சி அடைந்து உள்ளது. இதனால், தங்கள் இன்று இரவுக்குள் எப்படியாவது 120 கோடி ரூபாயை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்துவிட வேண்டும் என்று ரகசிய திட்டம் வைத்திருக்கிறார்கள் என்கிற பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.

     தினகரன் ஆரூடம்

    தினகரன் ஆரூடம்

    மேலும், ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட தேர்தலின் போதும் இதுபோல கடைசி நேரத்தில் பணத்தை விநியோகிக்க திட்டமிட்டு இருந்ததாகவும், அதை கட்சியினரே பலர் எடுத்து கொண்டு ஓடிவிட்டதால் அதற்காக ஏற்பாடுகளுடன் இந்த முறை பணத்தை கொடுக்க திட்டமிட்டு உள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+