உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றிக்கு உழைப்போம்: பா. வளர்மதி தலைமையில் அதிமுகவினர் உறுதி
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதவெற்றிக்கு உழைப்பது என அ.தி.மு.க. இலக்கிய அணி கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய களப்பணி குறித்து, அதிமுக இலக்கிய அணி சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.இ.அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மாபெரும் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
கழக இலக்கிய அணிச் செயலாளர் திருமதி பா. வளர்மதி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அ.இ.அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், விவசாயக் கடன் தள்ளுபடி, 500 மதுபானக் கடைகள் அடைப்பு உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டது மற்றும் முதலமைச்சரின் சாதனைத் திட்டங்களை பட்டிமன்றம், கருத்தரங்கம் உள்ளிட்டவை மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

முதல்வருக்கு நன்றி
கூட்டத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்து கழக ஆட்சி அமைத்த முதல்வர் அம்மாவுக்கு நன்றி தெரிவிப்பது. மக்களின் மனமே எனது மனம் என தவவாழ்வு வாழ்ந்து தேர்தல் நேரத்தில் மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை பதவியேற்ற ஓரிரு நாட்களில் ஐந்து அரசாணைகளில் கையெழுத்திட்டு தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றிக் காட்டிய அம்மாவுக்கு நன்றி தெரிவிப்பது.

முதல்வருக்கு பாராட்டு
கச்சத்தீவை மீட்பேன் என்று சட்டமன்றத்தில் சங்கநாதம் முழங்கி மீனவ மக்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தி தொடர்ந்து உரிமைப்போர் நடத்தும் புரட்சித்தலைவி அம்மாவுக்கு பாராட்டு.

மெட்ரோ ரத்த வங்கி
202 கோடியில் தலைநகர் டெல்லிக்கு அடுத்து சென்னையில் "மெட்ரோ இரத்த வங்கி" அமைக்கப்படும் என்று அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

முதல்வரின் சாதனை
முதல்வரின் தரணி போற்றும் திட்டங்களையும் சாதனைகளையும் பட்டி தொட்டியெங்கும்- குக்கிராமங்கள் முதல் குமரிமுனை வரை தெரு முனை பிரச்சார கூட்டங்கள்- திண்ணைப்பிரச்சார கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் கொண்டு சேர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது.

100 சதவிகித வெற்றி
பட்டிமன்றங்கள், கருத்தரங்கள், கவியரங்கங்கள் மூலமாக எடுத்து சொல்லி வீடு வீடாக, வீதி வீதியாக, கொண்டு போய் சேர்த்து உள்ளாட்சி, நகராட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றிக் கனியை ஈட்ட சபதமேற்பது ஆகிய 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவினர் உறுதி
கருத்தரங்கில் அவை தலைவர் மதுசூதனன் அமைச் சர்கள் எஸ்.பி வேலு மணி, தங்கமணி, ஆர்.பிஉதயகுமார், சரோ ஜா, ராஜலெட்சுமி, திருச்சி வளர்மதி அமைப்பு செயலாளர்கள் விசாலாட்சி நெடுஞ்செழியன், மைதிலி திருநாவுக்கரசு, உள்பட அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.
-
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications