விஷ்ணுப்பிரியா இறுதிச் சடங்கைப் புறக்கணித்த அதிமுக - பாமக!
கடலூர்: பெண் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் இறுதிச் சடங்கில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்ட நிலையில் ஆளும் கட்சியான அதிமுகவும், பாமகவும் மட்டும் இதில் கலந்து கொள்ளாமல் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுப்பிரியா (27). நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் திடீரென தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அவரது உடல் சொந்த ஊரான கடலூரை அடுத்த கொண்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு இறுதிச் சடங்குகள் நடந்தன. விஷ்ணுப்பிரியாவின் உடலுக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் அதிமுக, பாமக சார்பில் மட்டும் யாருமே வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. அதிமுக வராததற்குக் காரணம் கூறி விடலாம். ஆனால் பாமக ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. அதற்கும் சிலர் வேறு ஒன்றைக் காரணமாகக் கூறினார்கள்.
விஷ்ணுப்பிரியாவின் இறுதிச்சடங்கில் திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications