தினகரன் அமைத்துள்ள ஆட்சி மன்ற குழுவை நாங்கள் அங்கீகரிக்கவில்லை: சொல்கிறார் மாஃபா
டிடிவி தினகரன் அமைத்துள்ள ஆட்சி மன்ற குழுவை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் அமைத்துள்ள ஆட்சி மன்ற குழுவை நாங்கள் அங்கீகரிக்கவில்லை எனமுன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். விரைவில் அதிமுக ஆட்சி மன்றக் குழு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தல் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கேபி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது,
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படுவதுதான் உண்மையான அ.தி.மு.க. இது தொடர்பான தீர்ப்பு சட்டரீதியாகவும், அரசியல் சாசனம் ரீதியாகவும், தேர்தல் ஆணையம் மூலமாகவும் வரும். ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது யார்? என்பது குறித்து நாளை ஓ.பன்னீர்செல்வம் தக்க பதில் அளிப்பார்.
அ.தி.மு.க.வின் ஆட்சி மன்ற குழு வெகு விரைவில் அமைக்கப்படும். டி.டி.வி. தினகரன் அமைத்துள்ள ஆட்சி மன்ற குழுவை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. அவர் துணை பொதுச்செயலாளர் என்பதை தேர்தல் ஆணையமே அங்கீகரிக்கவில்லை. ஆகையால் அது செல்லாது. இவ்வாறு முன்னாள் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications