Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஜெ. பதவி பறிபோகிறதே...

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தாலே ஜெயலலிதாவின் பதவி பறிவோது தொடர் கதையாகிறதே என்பதுதான் அதிமுகவினரின் சென்டிமென்ட் கவலையாக இருக்கிறது.

டான்சி நிலபேர ஊழல் வழக்கில் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி ஜெயலலிதாவு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்து விடுவார். ஆனால் 2001ல் நடந்த சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.

ADMK sentiment..Jayalalithaa lose post twice in BJP period

ஆனால் இந்த 4 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அத்தேர்தலில் அ.தி.மு.க. 140 இடங்களில் போட்டியிட்டு, 132 இடங்களில் வென்றது. தேர்தலை சந்திக்காத ஜெயலலிதாவை முதல்வராக அதிமுக தேர்வு செய்தது. அவரும் 2001 மே, 14ந் தேதி முதல்வராக பதவியேற்றார். ஆனால் 2001ஆம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்றது செல்லாது என்று ரத்து செய்தது. இதனால் ஜெயலலிதா முதல்வர் பதவி பறிபோய் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார்.

ஜெயலலிதாவின் முதலாவது "முதல்வர் பதவி பறிப்பு நிகழ்ந்த போது மத்தியில் அதாவது 2001ஆம் ஆண்டு பாஜகவின் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் இருந்தது.

தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் 2வது முறையாக ஜெயலலிதாவின் "முதல்வர் பதவி பறிப்பு" நிகழ்ந்துள்ளது. அட இப்போதும் பாஜகவின் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் மத்தியில் இருக்கிறது.

என்னதான் பாஜகவும் அதிமுகவும் "இயற்கை கூட்டணிகள்" என்று கூறப்பட்டாலும் ஜெயலலிதாவின் "முதல்வர் பதவி" பறிப்பில் இப்படி ஒரு சென்டிமென்ட் வந்துவிடுகிறதே என்பது அதிமுகவினர் கவலை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+