ஜெயக்குமார் நன்றி மறந்து நாகரீகமில்லாமல் பேசுகிறார்... நாஞ்சி சம்பத் 'பொளேர்'
டிடிவி தினகரனை சந்திக்காத எம்எல்ஏக்களும் அவருக்கே ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை : அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே நன்றியை மறந்து நாகரீகமில்லாமல் பேசுவதாக அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனை பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சென்னையில் இன்று சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவில் என்றுமே தினகரன் உள்ளதாக தெரிவித்தார். தினகரன் இல்லாத கட்சி இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் நாஞ்சில் சம்பத் கூறியதாவது:
கட்சியும், ஆட்சியும் ஊனமடைந்துவிடக்கூடாத என்பதற்காகவே டிடிவி தினகரன் அமைதியாக இருக்கிறார். கட்சியை ஒருங்கிணைத்து நிச்சயம் இரட்டை இலை சின்னத்தை அவர் பெற்றெடுப்பார். டிடிவி தினகரனுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவாக உள்ளனர்.
தினகரனை வந்து சந்தித்த எம்எல்ஏக்கள் மட்டுமல்ல அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவுமே டிடிவி. தினகரனுக்குத் தான் உள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னுடைய நிலைப்பாட்டை சொல்லி இருக்கிறார் அதில் தவறு இல்லை.
அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே டிடிவி. தினகரனுக்கு எதிரான கருத்துகளை சொல்லி வருகிறார். அவர் நன்றி மறந்து நாகரீகமற்ற முறையில் பேசுகிறார். மற்ற அமைச்சர்களை முன்நிறுத்தி அமைச்சர் ஜெயக்குமார் தன்னை பாதுகாத்துக்கொள்ள நினைக்கிறார். கட்சியை சேர்ந்த ஒருவர் கூட சந்திக்க மாட்டார்கள் என்று ஜெயக்குமார் சொன்னார், ஆனால் இப்போது சாரைசாரையாக கட்சியினர் வந்து செல்கின்றனர் இதற்கு ஜெயக்குமார் என்ன சொல்வார்.
எல்லோருமே வந்து தினகரன் சந்திக்கும் காலம் விரைவில் வரும். தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும் என்று 'பச்சைத் துரோகி' ஓ.பிஎஸ்சும், ஸ்டாலினும் மட்டுமே சொல்லி வருகிறார்கள், அவர்களின் எண்ணம் பலிக்காது. முதல்வரின் பதவியே தனது வாழ்க்கை என்று சிலர் நினைக்கிறார்கள் அவர்களைப் போல அல்ல டிடிவி. தினகரன் கட்சிக்காக பொறுமைகாக்கும் தலைவர். தேர்தல் நடைபெறுவது மக்களுக்கு நல்லதல்ல. வீணான பணச்செலவு ஏற்படும். அப்படியே தேர்தல் வந்தாலும் அதில் நிச்சயம் அதிமுக அம்மா அணி தான் வெற்றி பெறும்.
இவ்வாறு சம்பத் கூறினார்.
-
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications