அதிமுகவின் 2 அணிகளை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை: மைத்ரேயன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் இரண்டு அணிகளை இணைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரண்டு அணிகளையும் இணைக்க டிடிவி தினகரன் கொடுத்தக் காலக்கெடு முடிய உள்ளது. இதையடுத்து அவர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து கட்சிப் பணிகளை பார்க்க உள்ளார்.

நான் நிச்சயம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருவேன் என்று தினகரன் நேற்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மைத்ரேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அதிமுகவின் இரண்டு அணிகளையும் இணைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. யார் வேண்டுமானாலும் பன்னீர்செல்வம் அணிக்கு வரலாம். அப்படி வருவோரை நாங்கள் வரவேற்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி தலைமயிலான அரசு ஒரு ஊழல் அரசு. ஊழல் அரசுடன் கைகோர்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றார்.












Click it and Unblock the Notifications