ஜெ. மறைந்து இன்றோடு 30 நாள்... கண்ணீரில் தொண்டர்கள்.. மவுன ஊர்வலம்.. நினைவிடத்தில் திரளும் கூட்டம்
ஜெயலலிதா மறைந்து 30ஆம் நாள் நிறைவடைந்ததை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மரலரஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் கூட்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் நாள் உடல்நலக்குறைவினால் மரணமடைந்தார். அவரது உடல் ராஜாஜி அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது லட்சக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்த திரண்டனர். எனினும் 10 மணி நேரம் மட்டும் ஜெயலலிதாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்களும் சென்னைக்கு வந்து ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர்.

30ஆம் நாள் நினைவஞ்சலி
ஜெயலலிதா மறைந்து 30 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழகத்தில் பல பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

அன்னதானம்
காடாம்புலியூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா 30வது நினைவு நளையொட்டி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தேவநாதன் தலைமையில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான அதிமுகவினர் திராளாக கலந்துகொண்டு அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

நினைவிடத்தில் திரளும் கூட்டம்
ஜெயலலிதா மறைந்து 30 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு துக்கம் அனுசரிக்கும் விதமாக தொண்டர்கள் மவுன ஊர்வலமாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்களுக்கு, அதிமுக சார்பில் குடிநீர், உணவுப் பொட்டலங்கள், மருத்துவ வசதி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

புதுச்சேரியில் நினைவுநாள்
புதுச்சேரியில் 30ம் நாள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
-
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications