எம்.எல்.ஏ. வாக பதவியேற்றதும் அமைச்சரவை மாற்றமா?..ஜெ. வின் அதிரடிக்கு கலங்கி நிற்கும் அமைச்சர்கள்..
சென்னை : தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நாளை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. வாக பதவியேற்றதும அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, அன்றைய தினமே பதவியேற்பதாக இருந்தது.
ஆனால், அன்றைய தினம் நடைபெற இருந்த பதவியேற்பு நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நாளை அவர் ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக பதவியேற்க உள்ளார். அதை தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்களை அவர் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக அமைச்சர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
மேலும் நாளை பதவியேற்று முடித்ததும் அவர் கொடநாடு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.