ஒரு வாரத்தில் சட்டசபையை கூட்டி பலத்தை நிரூபிக்க உத்தரவிடலாம்.. மத்திய அரசின் தலைமை வக்கீல் பரிந்துரை
ஒரு வாரத்தில் சட்டசபையைக் கூட்டி பலத்தை நிரூபிக்க உத்தரவிடலாம் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கூறியுள்ளார்.
சென்னை: ஒரு வாரத்தில் தமிழக சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடலாம் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவுக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி பரிந்துரைத்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி சிதறுண்டு கிடக்கிறது. அதிமுக பிளவுபட்டு நிற்கிறது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்து விட்டார். மறுபக்கம் சசிகலாவை அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்துள்ளனர். ஆனால் யாரையும் ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் மவுனம் காத்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகியிடம் ஆலோசனை கேட்டிருந்தார் ஆளுநர். அதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் ரோத்தகி. அதன்படி, ஒரு வாரத்தில் சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடலாம். யார் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கிறார்களோ அவர்களே ஆட்சியமைக்கலாம் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications