நீளும் துன்பம்... மீண்டும் ஒரு விவசாயி தற்கொலை - வீடியோ
அந்தியூரில், தன் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல்லும் வாழையும் கருகுவதைக் கண்டு மனம் வெந்து, விவசாயி ராமலிங்கம் என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ராமலிங்கம் என்ற விவசாயி தன்னுடைய நிலத்தில் பயிர்கள் கருகுவதைக் கண்டு மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் இந்த வருடம் பருவமழை போதிய அளவு பெய்யாத காரணத்தால், கடும் வறட்சி நிலவி வருகிறது. 140 வருடங்களில் இல்லாத வகையில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி நாசமாகின.

மத்திய அரசிடம் வறட்சி நிவாரணமாக 30,000 கோடி ரூபாய் கேட்டது தமிழக அரசு. ஆனால் கிடைத்ததோ வெறும் 1127 கோடி ரூபாய் மட்டுமே.
இந்நிலையில், கருகிவரும் பயிர்களை கண்டு மனமுடைந்தும், கடன் தொல்லையாலும் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை நடந்திராத இந்த துயரம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் விவசாயிகள் 36ஆவது நாளாக சுட்டெரிக்கும் வெயிலில் போராடி வருகின்றனர். ஆனால் இன்று வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் மீண்டும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில், தன் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல்லும் தென்னை மரங்களும் வறட்சியால் கருகுவதைக் கண்டு மனமுடைந்து ராமலிங்கம் என்ற விவசாயி தற்கொலை செய்துகொண்டார். இது அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications