நெல்லை தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம்: தயார் நிலையில் மீட்பு குழுவினர்
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெல்லை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.
ஏற்கனவே பெய்த தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டியதால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் இன்று பிற்பகல் 12 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் கூடுதலாக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைடுத்து தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையை தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இங்கு முகாமிட்டுள்ளதால் மழை வெள்ளத்தால் சேதம் ஏற்படுவதை தடுக்க அவர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் வருவாய்துறை, பொதுப்பணித்துறையினரும் வெள்ள பாதிப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications