மாஜி அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் கிடைத்தது.. செந்திலுக்குத் தொடர்கிறது சிறைவாசம்!
மதுரை: வேளாண் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இன்னொருவரான வேளாண் செயற்பொறியாளர் செந்திலின் சிறைவாசம் தொடர்கிறது.

கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி வேளாண் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முத்துக்குமாரசாமியின் முடிவுக்கு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிமுகவினர் கொடுத்த கடும் நெருக்கடி மற்றும் மன உளைச்சலே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையை கையில் எடுக்கவே வேறு வழியில்லாமல், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அக்ரி. இதையடுத்து கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் செயற்பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டார். இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜாமீன் கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். அங்கு அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அக்ரி சார்பி்ல மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் 2 முறை மனு செய்யப்பட்டு 2 முறையும் அது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் 3வது முறையாக அவர் மனு செய்திருந்தார்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி கல்யாணசுந்தரம் இன்று நிபந்தனை ஜாமீனில் அக்ரியை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதன்படி சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் அவர் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications