திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கும்.. அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அவர். அப்போது கூறியதாவது: அதிமுக கட்சி விதிகளின்படியே பொதுக் குழு கூட்டப்பட்டுள்ளது. அதில் விதிமீறல் எதுவும் இல்லை.

பொதுக்குழு கூட்டப்பட்டிருப்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டால் அதை சட்டரீதியாக சந்திக்க தயார். என் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் எதிரணியினர் என்னை தரமற்ற முறையில் விமர்சனம் செய்கின்றனர்.
ஜக்கையனைப் போல தினகரன் அணியிலுள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏக்களாக எங்கள் அணிக்கு வருவார்கள். நேரம் வரும்போது அறுதி பெரும்பான்மையை நிரூபிப்போம். கட்சி விதியின்படி 5ல் ஒரு பகுதி உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். எனவே, திட்டமிட்டபடி 12-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications