Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக முன்னாள் அமைச்சர் வடிவேல் திடீர் மறைவு.. எடப்பாடி பழனிசாமி, சசிகலா இரங்கல்!

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் வடிவேல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது அவரது அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் ஆர்.வடிவேல். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சம்பந்திகுப்பத்தைச் சேர்ந்த வடிவேல், கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் நாகூர் ஹனிபாவை 19 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

AIADMK Former minister Vadivel passed away

பின்னர், ஜெயலலிதா அமைச்சரவையில், ஊரக தொழில் துறை அமைச்சராக பதவி வகித்தார். அதிமுகவில் விவசாய அணியின் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இதையடுத்து தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 82 வயதான வடிவேல் கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் வடிவேலுவின் உடல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்பந்திகுப்பத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை சம்பந்திகுப்பம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த வடிவேலுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் வடிவேல் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அதிமுக விவசாயப் பிரிவு முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். வடிவேல் அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அன்புச் சகோதரர் வடிவேல் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா தனது சமூகவலைதள பக்கத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக முன்னாள் ஊரக தொழில்துறை அமைச்சரும், கழக முன்னாள் மாநில விவசாயப்பிரிவு செயலாளருமான வடிவேல் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அன்பு சகோதரர் வடிவேல் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+